Sunday, July 5, 2020

kaathodu kaathanen tamil lyrics from jail

                      பாடியவர்கள் ; தனுஷ் , அதிதி ராவ் ஹைதாரி

                                        பாடல் ;  கபிலன்

 ஓ பெண்ணே ! ஓ பெண்ணே !
ஓ பெண்ணே ! ஓ பெண்ணே ! நீதானே ! காத்தோடு காத்தானேன் கண்ணே உன் மூச்சானேன் நீரோடு நீரானேன் உங்கூட மீனானேன் காகிதம் போலே ஒன்மேல ஓவியம் வரையும் நகமானேன் ! மோகத்தில் பெண்ணே ! உன்னாலே முத்தங்கள் வாழும் முகமானேன். இலை மறைவில் மலர்ந்திருந்தோம் மழைத்துளியாய் கலந்திருந்தோம்

சரணம் - 1 இலையில் மலரின் கைரேகை ! இமைகள் யாவும் மயில் தோகை ! ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஆனந்த வன்மம் மறவேனே ! மழலைப் போலவே மடியில் தவழ்ந்த மயக்கம் தீரவே இல்லை ! இரண்டு பேருமே இனிமேல் யாரோ இறைவன் கைகளில் பிள்ளை கண்மணி பூப்பூக்க காதல் விதையானோம் ! காமன் நாட்குறிப்பில் காதல் கதையானோம் !

சரணம் - 2 பூவின் மீது கூத்தாடும் போதை வண்டு போலானேன் ! புல்லின் மீது பூமியைப் போல் உந்தன் பாரம் நான் கண்டேன் ! இதழின் ஆற்றிலே குதிக்கும்போது கரைகள் என்பதே இல்லை கரைகள் இல்லை பரவாயில்லை கடலே காதலின் எல்லை ! வேர்வைத்துளிகளிலே என்னை நனைத்தாயே ! இதயம் நொறுங்கத்தான் இறுக்கி அணைத்தாயே ! கடைசி பல்லவி

காத்தோடு காத்தானேன் ! கண்ணே உன் மூச்சானேன் ! நீரோடு நீரானேன் ! உங்கூட மீனானேன் ! ஆயிரம் ஆசைகள் தாலாட்ட உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே ! விழிகள் மூடியே நடந்ததெல்லாம் கண்டேன் ! ரசித்தேன் ! சுகமானேன் ! இலை மறைவில் மலர்ந்திருந்தோம் ! மழைத்துளியாய் கலந்திருந்தோம் !

No comments:

Post a Comment

kaathodu kaathanen tamil lyrics from jail

                       பாடியவர்கள் ; தனுஷ் , அதிதி ராவ் ஹைதாரி                                          பாடல் ;  கபிலன்   ஓ பெண்ணே ! ஓ...